☰ MENU

About Us

Vision - பார்வை

தமிழக கைவினைஞர்களின் திறமை மற்றும் கடுமையான உழைப்பினால் உருவாக்கப்பட்டட பித்தளை, பஞ்சலோகம், மரம், கல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த கைவினைப்பொருட்களை சந்தையில் நுகர்வோருக்கும் மற்றும் கலை ஆர்வலர்களுக்கும் வெளிப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டு தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.இக்கழகத்தின் முக்கிய நேக்கங்கள்பின்வருமாறு:-

மேற்கொண்ட பணி

  • தமிழ்நாடு கைவினைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
  • கைவினைஞர்களின் திறமையை மேம்படுத்த உரிய பயிற்சிகள் அளித்தல்.
  • கைவினைஞர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்
  • உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களின் தரத்தை உயர்த்துதல்.
  • கைவினைப் பொருட்கள் உற்பத்தியில் ஏற்படும் பணிப்பளுவை குறைத்தல்.
  • கைத்திறத் தொழிலில் நேரிடும் இடர்பாடுகளைக் குறைத்தல் /நீக்குதல்
  • வடிவமைப்புகளில் புதுமையை ஊக்குவித்தல்
  • கைவினைஞர்களுக்கு சமூக-பொருளாதார பாதுகாப்பு அளித்தல்
  • மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களின் விவரங்களை ஆவணமாக்குதல் மற்றும் பதிவு செய்தல்
  • கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினைஏற்படுத்துதல்.
  • கைத்திறத் தொழிலில் கைவினைஞர்களின் கலைப்படைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்தல்.