தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (TNHDC) 1973 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. "பூம்புகார்" , நிறுவனத்தின் பெயர் தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம். எங்கள் நிறுவனத் தயாரிப்புகள் நேர்த்தியாகவும், அழகாகவும் சாதாரண விலையில் கிடைக்ககூடியதாகவும் உள்ளது. கைத்திறப் பொருட்கள் கவனமாக கையால் வடிவமைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்காக சந்தைப்படுத்தப்படுகின்றது. எங்களிடம் வெண்கலம், பித்தளை, செம்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்ட பல்வேறு வடிவங்களினாலான பஞ்சலோகசிலைகள் உள்ளன. மேலும் தஞ்சை ஓவியங்கள், தஞ்சாவூர் கலை தட்டுப் பொருட்கள், வெள்ளை உலோகத்தினாலான பொருட்கள், கருப்பு உலோகத்தினாலான பொருட்கள், மர சிற்பங்கள், கற்சிற்பங்கள், மர வேலைப்படுகள், கல் வேலைப்படுகள், தோல், சணல் மற்றும் களிமண்ணால் ஆன பொருட்கள், சுவாமிமலை பஞ்சலோகசிலைகள், கொண்டப்பள்ளி பொம்மைகள், மீனாகரி, கலம்கரி, சந்தனமாலைகள், போன்றவை உள்ளன.
பூம்புகார் நிறுவனம், சென்னை, சென்னை விமான நிலையம், வண்டலூர் உயிரியல் பூங்கா, ஐஐடி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகம், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சுவாமிமலை , புது டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகியவற்றில் அமைந்துள்ள 17 விற்பனை நிலையங்கள் மூலம் கைவினைஞர்களின் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. பூம்புகாரின் 7 உற்பத்தி மையங்களான மாமல்லபுரம் (கற்சிற்ப உற்பத்தி நிலையம்), நாச்சியார்கோயில் (பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்கள் உற்பத்தி நிலையம்), மதுரை (பித்தளை விளக்குகள் மற்றும் பித்தளை கலை பொருட்கள் உற்பத்தி நிலையம்), வாகைக்குளம் (வெண்கல பொருட்கள் உற்பத்தி நிலையம்), சுவாமிமலை (உலோகசிற்ப உற்பத்தி நிலையம்), தஞ்சாவூர் (தஞ்சாவூர் கலை தட்டுகள்), கள்ளக்குறிச்சி (மரவேலைப்பாடுகள்).